Thursday, February 7, 2013

கடலின் முடிவில் மறையும் வானம்



ஒற்றையடிப்பாதை ஒன்றில் 
ரகசியங்கள் சுமந்தவாறு
நடக்கிறேன் 

பாரம் சற்று அதிகம்தான் எனினும் 
நடையில் தெரியும் துள்ளல் 
வியப்பூட்டுவதாய் இருக்கிறது 

உனக்கான வழித்துணையும் 
நமதிந்த ரகசியம் தான்
என்பதறிவேன் 

ரகசியங்களை உரசிச்செல்லும்
சம்பவங்களும் சம்பாசனைகளும் 
ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது நமக்கு 

இருவருக்கான ரகசியங்கள் 
தனித்த பொழுதுகளில் 
ஒரு குழந்தையின் குதூகலத்துடன் 
துள்ளத்தொடங்கிவிடுகின்றன 

வாசல் வரை வரமுடியா அவைகள் 
கொல்லைப்புறத் தோட்டமெங்கும் 
நமக்கான உலகத்தை 
ஸ்ருஷ்டித்தபடியே இருக்கின்றன 

நன்றி:கல்கி.


No comments:

Post a Comment