Tuesday, February 12, 2013

நான் ஒருஓவியம் வரைந்தேன்




பறக்கும் அந்த ஜோடிப்புறாக்களில்
ஒன்று நான் எனில் மற்றொன்று யார்
என்ற ஆர்வம் உங்களுக்கு

மூடிய அந்தக் கதவுக்குப் பின்னால் இருப்பது
நான் தான் என்பதை
உறுதி செய்துகொள்ளும் பதற்றம் உங்களுக்கு

அடித்துப் பெய்யும் அம்மழைக்காட்சி
என் சோகமா வெறுமையா காமத்தின் சாயலா
பெருத்த ஐயம் உங்களுக்கு

ஒரு மோப்பநாயினை ஒத்து
என் ஓவியத்தைக் கலைத்திருக்கிறீர்கள்

நானொரு கவிதை எழுத விளைகிறேன்
அதிலேனும் என்னைத் தேடாதிருங்கள்
****
நன்றி:மலைகள்.காம் 


No comments:

Post a Comment