Thursday, February 7, 2013

தடயங்கள் சுமந்து வெளியேறும் கண்கள்



அன்பின் வழித்தடத்தை
தேடி தோற்று உறையும்
வாழ்ந்து கெட்ட வீட்டில்
சலனமற்று வழியும் கண்ணீர்

கண்மூடிக்கிடப்பதங்கே
தோற்ற வாழ்வென்று
ஈக்கள் ஆர்ப்பரித்து அறிவிக்கும்

கிசுகிசுத்து கசியும் நமட்டுச் சிரிப்பொலியில் 
மரணித்த மனிதம் அழுகிப்பரப்பும்
சகிக்க முடியா துர்நாற்றம் ஒன்றை

மழை ஓய்ந்த காலைப் பொழுதொன்று
மரணத்தின் சாயல் அற்று 
மௌனமாய்ச் சொட்டிக்கொண்டிருந்தது

****

நன்றி: வல்லினம்

No comments:

Post a Comment