Thursday, February 7, 2013

பயணம்





நாம் கடக்கவேண்டிய தூரம்
நீண்டபடியே செல்கிறது

தகிக்கும் பாலையில்
கவனச்சிதறல்கள் அற்ற
துரிதப்பயணத்தின் சாத்தியங்கள் உரைக்கிறாய்

ஈச்சமர நிழல் ஒன்றை
கடக்கநேர்கையில் கூட வேகம் கூட்டுகிறாய்

காய்ந்து உதிரும் ஆவியின்
கடைசித் துளியை ஏந்திக்கொண்டு
உன் கால்தடம் பற்றி நடக்கிறேன்
அனைத்து அறிதல்களோடும்

நிச்சலனக்கானல் எங்கும்         
நிரம்பித்ததும்பும் பேரன்பின் துளிகள்

******
நன்றி:உயிரோசை.

No comments:

Post a Comment