Thursday, February 7, 2013

நதி இலை எறும்பு



  
உன் வார்த்தைகளின் தடம் பற்றி
நான் நடந்துகொண்டிருக்கிறேன் 

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறாய் 
அன்பை 

காதலை
நம்பிக்கையை
துரோகத்தை
கோபத்தை
வன்மத்தை
வெறுமையை
நிறைவை 

கொழுத்த உன் கன்னத்தில் 
திரண்டிருக்கும் அம்மச்சம் 
என் கண்களில் விழுந்து உறுத்துவதை 
அறியாமலேயே..!

*****
நன்றி:நவீன விருட்சம்.

No comments:

Post a Comment