Tuesday, February 12, 2013

ஒவ்வாமையின் வாசனை



சர்ப்பம் போன்ற உனது வருகையால்
சலசலத்துக் கைமாறும் என் தேசம்
கரை ஒதுங்கும்
கடல் தின்ற மிச்சமென

வால் முளைத்த வலிகள்
குருதியின் வாசனை பொங்க
நீந்தத்தொடங்கும் அதன் பாதையெங்கும்

நனைந்த தீபத்தின் திணறும் ஒளியினூடே
கருகிப்புகையும் மௌனகாலத்தில்
மனம் சுரண்டி
ஒற்றை அச்சில் சுழன்று அடங்கும்
சர்ப்ப வருகை

நன்றி:மலைகள்.காம் 

No comments:

Post a Comment