சர்ப்பம் போன்ற உனது வருகையால்
சலசலத்துக் கைமாறும் என் தேசம்
கரை ஒதுங்கும்
கடல் தின்ற மிச்சமென
வால் முளைத்த வலிகள்
குருதியின் வாசனை பொங்க
நீந்தத்தொடங்கும் அதன் பாதையெங்கும்
நனைந்த தீபத்தின் திணறும் ஒளியினூடே
கருகிப்புகையும் மௌனகாலத்தில்
மனம் சுரண்டி
ஒற்றை அச்சில் சுழன்று அடங்கும்
சர்ப்ப வருகை
நன்றி:மலைகள்.காம்
No comments:
Post a Comment