Thursday, February 7, 2013

ஆசுவாசம்



இருள் அப்பிப்பிசுபிசுக்கும் 
என் இருப்பெங்கும் 
அலறி ஓடும் ஓர் அம்மணம் 

உன் கால் பற்றி இரைஞ்சும் 
என் உயிரின் ஒற்றைச் சுடரை 
அகப்படுத்திக்கொண்டு 
மன்னிப்பை முகத்தில் வீசுகிறாய் 

கண்ணனின் கருணையாய் ரட்சிக்கவரும் 
கவிதைக்குள் ஒளிய முயன்று 
பாடுபொருள் எங்கெங்கும் 
உன் முகம் கண்ட அயர்ச்சியில், 
சற்று தலை சாய்க்கிறேன்
வானம் அறியா குயில் குஞ்சு ஒன்றின் 
ஈரம் உலரா சிறகின் அடியில்

*****

நன்றி:உயிரோசை.

No comments:

Post a Comment