Thursday, November 22, 2012

துரோகத்தின் முதல் துளி



இருள் திணறும் சாமம் ஒன்றில்
தீட்டுத்துணியுடன்
அவன் வீசும் அர்த்தப்படாதப் பார்வை ஒன்றையும்
சுருட்டிக்கொண்டு
கழிவறை நுழைகிறாள் 

கருவறை நிராகரித்த மழலை ஒன்று 
கனவுகள் உடைத்து வெளியேற
காலம் குருதியாய் கசியத்தொடங்கும் 

விடியலில் முற்றம் பிளக்கும் 
ஓலம் எண்ணி
போர்வைக்குள் சுருண்டுப் படுக்கும் இரவு 

ரட்சிக்கும் கருப்பை ஒன்றை
அவர்கள் தேடத்துவங்கும் தருணம்
 
அவன் கனவுக்குள்ளும் விரியலாம் 
மற்றும் ஒரு யோனி
அவள் கண்களை மறுதலித்தவாறே

*****
நன்றி:உயிரோசை.