Monday, April 1, 2019

மரணம் ஒரு ஞானம் நுரைக்கும் போத்தல் எனில்
நுரைத்து அடங்கிவிடும் ஞானம் ஞானமே அல்ல.அது வெறும் சலனம்.

வரிசையாக நம் கண்முன்னே மரணம் ஒரு பைத்தியம் பிடித்தக் குரங்கென முதிராக் கனிகளைப் பறித்து வீசிக் கொண்டிருக்கிறது. வாரம், மாதம் என்று அவரவர்க்கு தக்கபடி துயரமும், ஞானமும் கருமேகமென அப்பிக்கொள்கிறது.பின் கலைந்து காணாமல் போகிறது.

உண்மையில் எந்த மரணமும் இதயத்தை சுத்திகரிப்பதில்லை. குளத்தில் வீசப்பட்ட கூழாங்களென அல்லது மிகக்குறைந்த ரிக்டரில் வரும் நிலநடுக்கமென ஒரு அலையை, அதிர்வை உண்டாக்கிவிட்டு பின் இந்த மனித ஜென்மத்திடம் அது தோற்று நிற்கிறது.

மரணிப்பான் என்று தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேசித்திருப்பேன், இன்னும் கொஞ்சம் பேசியிருப்பேன், புன்னகைத்திருப்பேன், மன்னித்திருப்பேன்..இப்படி எண்ணாத மனமுண்டா?! அப்படியெனில் நாம் மரணமற்றவர்கள் என்று இத்தனை நாளும் நம்பிக்கொண்டிருந்தோமா? அல்லது அகால மரணங்களுக்கு மட்டுமே நம் மனம் தரும் சலுகையா இந்த நேசமும் மன்னிப்பும்?!

மரணத்தை நிதமும் கடந்தபடியே இருக்கும் நாம் ஒருபோதும் நிபந்தனைகளற்று நேசிப்பதில்லை, புன்னகைப்பதில்லை, மன்னிப்பதில்லை. கோவம், வன்பம், பொறாமை அற்ற இதயத்தை நாம் ஒருபோதும் கைகொள்வதில்லை.எவரின் மரணமும் அந்த வேலையைச் செய்துவிட்டுப் போவதில்லை.

No comments:

Post a Comment