Sunday, April 28, 2019

மௌனத்தைச்
சிதையிலேற்றுகிறேன்
சொற் சுள்ளிகளை வீசி எரி

உறைந்த வானில்
சிறு புள்ளியெனப் பற

குருடனின் திருவோட்டில்
சிற்றொலியாய் வீழ்

மூளிச் சிலையின் மேல்
கதிரவனாய் பொழி

ஊமைக் குயிலை
வெறித்திருத்தல் துயரம்

No comments:

Post a Comment