Sunday, April 21, 2019

இதயம் இடம்பெயர்ந்தாயிற்று
மணிக்கட்டு நரம்புகள்
கண்திறந்து சிரிக்கின்றன
மூளையின் பின்மேட்டில்
அருவி பீறிடுகிறது

உடல் வெறும் கூடென்று
சொன்னவன் எங்கே

இரவு ஒரு இடுகாட்டு நாய்

நடுங்கும் என் நெற்றியில்
எச்சில் இடு
சுரவா முலையைத் தின்னக்கொடு
வியர்வையால் போர்த்து
நிலாவைச் சுருட்டி இசை

மெல்லப்பரவும் பாடலுக்கு
நீலநிறம்

No comments:

Post a Comment