Saturday, April 20, 2019

பெரும் கோட்டையென இறுமாந்திருந்தேன்
விரல் கொண்டு சுண்டும்
என் ஆதியந்தமே
நடுங்கும் அதன் அஸ்திவாரம் பாராய்
கதறும் என் இதயத்தின்
ஒலி கேட்கிறதா
இறைஞ்சும்
இக்கண்களைப் பொசுக்குங்கள்
என் கூந்தல் கொண்டு
குரல்வளையை முடிச்சிடுங்கள்
பால்மறவா சிறு நாயிது
ஊர்தாண்டிய சாலையில்
கைவிடமாட்டீரா


No comments:

Post a Comment