Friday, April 5, 2013

அன்பின் தீக்கொடி:





மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்
விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ 
அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய் 

வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி 
ஓயாமல் அலைகின்றேன்-நீயோ
மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை  சிபாரிசு செய்கிறாய்

இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய் 
வெம்மையில்  நசுங்கி வழிகிறது இரவு 

புயல் தின்ற  முதிர்ந்த நெற்கதிரென 
உன்  வயலெங்கும் உதிரும் எனது இருப்பு 

**********
நன்றி:கீற்று இணைய இதழ்.

No comments:

Post a Comment