Thursday, March 28, 2013

வெயில் வளரும் பாதங்கள்




தேர்ந்த வித்தைக்காரன் நீ
குறித்த இடத்தைப் பிசகாமல் சென்று
தைத்துவிடும் அம்பு உன் சொற்கள் 

ஒரு குழந்தை கதைசொல்லியினைப் போலுன்னை
நெருங்க எத்தனித்து ஒரு திடும் தருணம்
மிக லாவகமாய் நறுக்கி எடுக்கிறாய்
என் இதயத்தின் பாகங்களை

சமயங்களில்
உன் பெயர் எழுதப்பட்ட பருக்கைகளை
எனக்கு வழங்கும் பெருந்தன்மை உனது
ஆயினும் 
அதில் கொஞ்சம் உமிழ்ந்துக் கொடுக்கும்
உரிமை உனக்கு உண்டு

உன் பாதம் நக்கும் உடல் ஒன்றைக் கைவிட்டு
வெளியேறும் எனது உயிர் 
இரவு பைத்தியத்தின் ஏகாந்த தனிமையில் 
மிதந்து நகர்கிறதுஉன் எல்லையினை கடந்து..

******

நன்றி:உயிரோசை.

No comments:

Post a Comment