Friday, March 29, 2013

முத்தம் என்பது முத்தம் மட்டுமல்ல




பெருமழைக்கால முன்னிரவுப் பொழுதொன்றில் 
உறைந்த உதடுகளோடு  
நீ என் வீடு வந்தாய் 

சிக்கித்தவிக்கும் வார்த்தைகள் உண்ண 
வெம்மை சமைத்த உதடுகள் கேட்டாய் 

உடல்கள் குவிந்து கரைந்து 
உதடுகள் மட்டுமே எஞ்சிய 
ஒளி கசியும் இருள் பொழுதில்  
தவித்துச்சிறகடிக்கும் ஜன்னல் வழி
ஒற்றை எழுத்துச்சொல் ஒன்று 
வெட்கிச் சிவந்து வெளியேறும் 

முத்துக்குளிப்பவனின் ஆவல் எனக்கு
அருவி மீனின் பாய்ச்சல் உனக்கு

நீ நான் அற்ற  
நாம் இவ்வுலகை கைவிட்ட தருணம்..  
வெளியே மழை வலுத்திருந்தது.

*****
நன்றி:உயிரோசை.

No comments:

Post a Comment