Friday, November 27, 2020

திரை

 முகமூடியைத்தாண்டி 

முகத்தைக் காணும் கண்கள் வாய்த்தபின்


நெகிழ்ச்சியூட்டும் நாடகங்கள்

சிரிப்பை வரவழைப்பதாய் இருக்கின்றன


காதலி தேகமெங்கும் பன்னீர் சிந்தி

கரம் பற்றுகிறான் காதலன்

எனக்கு மலநாற்றம்

குடலை அறுக்கிறது


மெல்ல அணைத்து முத்துகையில்

நான் வாயைப்பொத்திக் கொண்டு

கழிவறைக்கு ஓடி ஓங்காரிக்கிறேன்


நாடகம் இளகி இளகி

நீண்டுகொண்டே

போகிறது


****



No comments:

Post a Comment