Friday, November 27, 2020

அம்மணம்

 ஊரின் மத்தியில் இருக்கும்

பெரிய வீடு

தன்னை மறைத்துக் கொள்ள

பெரும்பாடு படுகின்றது


ஒரு சிறிய அழுகை

ஊர் எல்லைவரை கேட்டுவிடுகிறது


ஐந்துநிமிட விவாதம்

பொது கிணற்றில் அலசலுக்கு 

ஆட்பட்டு விடுகிறது


மெல்லிய சாராய நெடியை

எட்டுத்திசையிலும் பறக்கவிட்டு விடுகின்றன பெரிய சன்னல்கள்


அவிழ்ந்து விழும் வேட்டியை

தடுமாறி பிடிப்பதற்குள்

பத்து பேர் பார்த்துவிடுகிறார்கள்


ஊர் மத்தியில் நிற்கும்

உயர்ந்த வீடு

நிராயுதபாணியாக  நடுங்கி கொண்டிருக்கிறது


முப்பாட்டன் பெருமையை

காலிப் பெட்டகத்திற்குள்

வைத்து மூடுகையில்

அவ்வீட்டின் சுவர்கள் 

நாளாப்புறம் திறந்துகொண்டு விழுகின்றன


****

No comments:

Post a Comment