Friday, October 9, 2020

சடலம்

 நான் மலர் என்கிறேன்

நீ இருள் என்கிறாய்
நான் நுகரத் தருகிறேன்
நீ இருள் என்கிறாய்

நான் கனி என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் புசிக்கத் தருகிறேன்
நீ இருள் என்கிறாய்

நான் சிலை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் வருடத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்

நான் வீணை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் மீட்டத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்

நான் அன்பென்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் முத்தமிடுகிறேன்
நீ புணரத் தொடங்குகிறாய்
நான் இருள் என்கிறேன்

No comments:

Post a Comment