Sunday, October 2, 2016

சீழ் தழும்பிக் குடைந்து கொண்டிருந்த
நெடுநாள் ரணமொன்று
உடைந்தது
அல்லது
உடைத்தேன்
வெள்ளை ஆடை முழுதும் பரவும்
செந்நிறக் குருதி
பிரபஞ்சத்தின் கதவுகளைத்
திறந்துவிடுகிறது
அத்தனை ஆசுவாசமாய்
அத்தனை சுதந்திரமாய்

No comments:

Post a Comment