Saturday, April 9, 2016



ஊருக்குச் செல்லும் 
குழந்தைகள்
வீட்டைப் பிரித்து
சுவர்களை மிச்சம் விட்டுச் செல்கிறார்கள்
நிறங்களை அள்ளிக் கூந்தலில் சொருகிக்கொண்டு
வெற்றுச் சதுரத்தைக்
கையளிக்கிறார்கள்
உலகம்
ரோஸ் நிற பலூனாகி
அவர்கள் பின்னே பறந்து
மறைகின்றது
திசை தொலைத்த குருடனின்
கைத்தடியினூடே நெளிகின்றன
பாம்புகள்
ஒலியைப் பறிகொடுத்த
வனம்
ஓர் காட்சிப்பிழை
விழுந்து எழும் கதிரவனுக்கு
முடவனின் சாயல்

****

No comments:

Post a Comment