Saturday, December 12, 2020

பாவனைகளின் கூட்டு ஓட்டம்

வெடிச்சிரிப்பிற்கு பேர் போனவள் தான்

எதுவும் சொல்லாமல் தூக்கில் தொங்கியவள்


மரண வீட்டில் உகுக்கும் கண்ணீரில்

சொந்தக் கவலை கலந்திருக்கிறது


சிங்கம் போல நடந்து போகிறவன்

எங்கோ மண்டியிட்டு இறைஞ்சுகிறான்


வெற்றியைப் பாராட்டி விட்டு வீடு திரும்புபவர்

உறக்கம் பிடிக்காமல் புரள்கின்றார்


திவாலான நாளில் தெரியவருகிறது

வழங்கப்பட்ட மரியாதை யாருக்கானதென்று


தேநீரில் எச்சிலை உமிழ்ந்து கொடுத்தவள்

கலவியில் முதல்முறையாய்

புன்னகைக்கிறாள்


நெல்மணிக்கும் சீட்டுக்கட்டுக்குமான தூரத்தை 

வாழ்வெனப் பழக்கிவிட்ட ஜோசியக்காரன்

கூண்டு திறந்து அழைக்கிறான்

வெளிய வாடி என் அன்னலட்சுமி

****

No comments:

Post a Comment