Tuesday, September 1, 2015

வழிகாட்டி வெளிச்சம்


அடுத்த திருவிழாவுக்கு வருவதாக 
சொல்லிச்  செல்லும்
ராட்டினக்காரனின் வண்டிச்சக்கரத்தில்
நெரிபட்டுச் சிதைகிறது
சிறுமியின் வானம் 

கனக்கும் பாடல் ஒன்றை
உரக்கப்பாடியபடி
ஒற்றையடிப் பாதையில்
வண்டியை திருப்பும்அவன்
போய்சேரும் இடம் வரை
நிலாக்களை கணக்கெடுப்பான் 

'களுக்' என்ற ஒலியுடன்
விழுந்து
மூழ்கும் கூழாங்கல்
தரை தட்டி வெறிக்கிறது 

தனது சிறகுகளைப் பிடுங்கி
தினம் ஒன்றெனெ
நாட்காட்டியில் சொருகத்தொடங்குபவளின்
வானம் கரைந்து புள்ளியாகிறது  

கிளிகள் கீச்சிடத் தொடங்கும்
மற்றுமொரு விழாநாளில்
பசிய சிறகுகள் ஏந்தி
இங்கு வந்து சேரும்
அந்நீண்ட பாதை

***
நன்றி : கணையாழி இதழ் 

2 comments: