Thursday, December 24, 2015

ஒரு துண்டு வானம்



வேட்டு அதிரும் பூமியிலும்
சுள்ளியுடன் பறக்கும் பறவையை
வானம் காண்கிறது

காடு பற்றி எரிகையிலும்
எங்கோ சில மொட்டுகள்
மணத்துடன் அவிழ்கின்றன

உயிர் பதுங்கும் இருளுக்குள்ளும்
ஒரு மெல்லிய முத்தம்
பகிரப்படுகிறது

சப்பாத்துக்கள் நெரியும் நிலத்திலும்
ஒரு மண்புழு
சிரத்தையுடன்
மண்ணைப் புரட்டிக்கொண்டுதான் இருக்கிறது

ஒரு சொல்லின் நெற்றியில்
குண்டு துளைக்கையில்
எங்கோ ஒரு வாக்கியம்
உருவாகிவருகிறது
****
சுஜாதா செல்வராஜ் ,
பெங்களூர் .

No comments:

Post a Comment