Sunday, October 21, 2012

கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்







பகல் உதிர்க்கும் அனல் பூக்களை
மாலையாகத் தொடுத்துக்கொண்டிருக்கிறேன்

கைவிட்டு விலகும் கதிரவன்
கறுத்த பாறையென
இவ்விரவை
அமிழ்த்திவிட்டு நகர்கிறான்.

அன்றொருநாள்
இடம் கொள்ளாமல்
நிரம்பி வழிந்த உன் முத்தத்தின்
ஈரம் தேடி..

சிறகு உதிர்ந்தப் பட்டாம்பூச்சியென
பதறித் தவித்து அலைகிறது
எனதிந்த இருப்பு

*****

நன்றி:உயிரோசை.

No comments:

Post a Comment