Sunday, October 21, 2012

புனைதல்






உன்னை வந்தடைய முடியா
வார்த்தைகள் பெரும் வாதைகள்

உன் மௌனம் செரிக்க
இதயத்தைத் தின்னும் என் சொற்கள்
 
சர்ப்பமென நெளிந்து நழுவுகிறது
நம் காலம்

வா,

மன முகட்டில் உருளும்
எனதிந்த உயிர் ஏந்த

உன் சிறகு துடிப்பின் வெம்மையில்
முகம் புதைக்க வேண்டும்

கனன்றுத் தகிக்க வனம்  
முதல் முகில் வேண்டும்


No comments:

Post a Comment