Tuesday, August 7, 2012

பிரியத்தின் இசை







அணை ஓர சிற்றலையாய் -என்
கரை மோதும் உனதன்பை
ஆழிப்பேரலையாய்
அள்ளி எடுத்து  உண்கின்றேன்

நூலின் நுனி என்னிடத்தில் என்றபோதும்
உயர உயர பறந்து விலகும்
காற்றாடியாய் -என்
தனிமையை பதற்றப்படுத்துகிறாய்

நடுங்கும் என் கரை உடைய
புன்னகை ஒன்றை வீசி எறி

வா...
வனம் தொலைவோம்


நன்றி உயிரோசை 

No comments:

Post a Comment