Tuesday, May 9, 2017

அத்தர் மணக்கும் பாலை

வெகு தொலைவு பயணித்து வருகின்றன
உதடுகள்

வறண்ட பாலையில்
முட்களினூடே நெழிதடம்
பதிக்கிறது சர்ப்பம்

செண்பகமரக் குரங்குகள்
மொட்டுக்களை தின்றுத் தாவுகின்றன

லாவகமாய் தோல்உரிக்கிறான்
முயல்கறிக்கு பழகியவன்

புழுதி படிந்த உதடுகள்
தணலில் புரண்டு
சிவக்கின்றன

பாதி வெந்த உதடுகளை
ஒத்தி எடுக்க
காத்திருக்கின்றன
அத்தர்  மணக்கும்
முத்தங்கள்

No comments:

Post a Comment