Thursday, June 18, 2015

அப்பா
உன் சொற்களை
திரும்பப் பெற்றுக்கொள்
ஒரு பூங்கொத்தைத் தருவதென
நீ அவைகளை கை சேர்த்தாய்
அவை பூக்கள் அல்ல
உன் சொற்கள்
விலங்கிடப்பட்ட
வெள்ளை மூளியாய்
தரை தேய விட்டிருக்கிறது
என் தாயை
எனக்கு ஒரு சொல் தந்தாய்
அது என்னையே
காவு கேட்கிறது
செதில் செதிலாய்
துண்டாடுகிறது
கசக்கும் எச்சில் பாலை
சப்பத் தந்துவிட்டு
எங்கு போய் தொலைந்தாய்
திரும்பி வா
உன் கன்னம் பழுக்கும்படி
மீண்டும்
ஒரு அறை கொடுக்கவேண்டும்
உன் கைகளுக்குள்
முகம் புதைக்கவேண்டும்
உனக்கு மிகப்பிடித்த
நானொரு ராசியில்லா ராஜாவை
பாட வேண்டும்
அவசரம்
ஒரு போத்தல்
சாராயம் வாங்கி வா
எரிந்து சாவோம்
கூடவே
எனக்கு பிரியமான
மசால் வடையும்
*****

No comments:

Post a Comment