Thursday, April 9, 2015



தாளாமல் தள்ளாடும் 
இவ்எளிய வீட்டினை 
பெரும் பாரமாய்
மௌனம் அழுத்திக்கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் வருவதாகச் சொல்லி கையசைத்துச் சென்றுவிட்ட அவள் ஒலிகளின் இளவரசி. வீணையின் தந்திகளை கவனமாக கவர்ந்து சென்றுவிட்ட சிறு மலரே, பேரலையே, மின்னிவரும் இடிமுழக்கமே இந்த அமைதி அச்சமூட்டுவதாய் இருக்கிறது. உன் ஒலி தந்த ஒளியில் மட்டுமே சுடரும் கருவறை தீபம் இது. உன் ஒற்றைச் சொல்லொலிக்கு துலாவுகிறது இருள் வழுக்கும் இவ்விருப்பு. பறவைகளுக்குச் சிறகசைப்பைக் கற்றுத்தருபவளே! பூனையின் பாதங்களை பயிற்றுவிப்பவளே!நிமிடங்களை விரட்டி ஓடும் சிறுமுயலே! விரைந்து வா. உன் ஒலிகளை அள்ளி வீசு. என் நெஞ்சு உலர்ந்து கொண்டிருக்கிறது.

                                         *************************

No comments:

Post a Comment