Wednesday, April 1, 2015

"உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால்
காலம் மொழியாகும் "
பெண்ணின் கேள்விகளுக்கான விடைகள் மட்டும் எப்போதும் காலத்தின் பொறுப்பில் விடப்படுகிறது. உண்மையில் காலம் பதில் சொல்லுமா?!! காலம் அவளுக்காக பேசுமா ? சினிமாவில் மட்டும் தான் காலம் எல்லாவற்றிற்குமான விடையை மூன்று மணி நேரத்திற்குள் சொல்லிவிடும்.
விடை தெரியாத கேள்விகளை, சொல்லப்படாத வார்த்தைகளைப் பெண், ஒரு தீச்சட்டியென கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறாள். காலம் பேசுமென வலி பொருத்து காத்திருக்கிறாள். இறுதியில் தீச்சட்டியை தலையோடு கவிழ்த்துக் கொண்டு எரிந்து சாம்பலாகிறாள்.
காலம் பதில் சொல்லும் என காலத்தின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது. காலம் கொட்டாவி விடக்கூட வாய்த் திறக்காது என்பது நம் ஆவி பிரியும்போது தான் நமக்குத் தெரியவரும். ஆக நம் கேள்விகளுக்கான பதிலை நாமே தான் தேடிப் பெறவேண்டும்.

                                                         ******************

No comments:

Post a Comment