Sunday, January 18, 2015

தூமைக் கால
வலி அடரும் இரவில்
கரம்பற்றி
விரல் வருடி
நினைவுகளைக் கிளறி
பட்டாம்பூச்சியென
பறக்கவிடுபவன்
பால்யத்தின் வீதிகளில்
பட்டத்தின் பின்னால்
ஓட விடுபவன்
சைக்கிளோடு
விழுந்துகிடப்பவளின்
முழங்கால் உதிரத்தைக்
காட்டி நகைப்பவன்
மேல்சட்டை இல்லா
கிணற்று நீச்சலில்
நீரள்ளி வீசுபவன்
படுக்கையை நனைத்த
சிறுநீரை பதறி
மறைப்பவன்
ஒற்றை மாம்பிஞ்சை
பிடுங்கிக்கொண்டு ஓடுபவன்
களைத்து ஓய்ந்தவளை
அம்மாவின் முலைக்கு
சப்பத்தருபவன்
அடைப்புக்குறிக்குள்
அடங்காதவன்
அவள் பெருவெளி எங்கும்
நிறைந்து நிற்பவன்

****

1 comment: