Saturday, January 3, 2015

மஞ்சள் புன்னகை



ஒரு சிறு மஞ்சள் புன்னகை
நோய்க்கு மருந்தாகிறது
கண்ணீரைத்துளிர்க்கச் செய்கிறது
அல்லது
மெல்லிய கைக்குட்டையாகிறது
இடுகாட்டு மௌனத்தை
உடைத்தெரியும்
பறவையின் குரலாகிறது
நடுநிசி ஊளைக்கு
நெற்றியில் வருடும்
திருநீராகிறது
விட்டத்தில் திணறும் கயிற்றை
பதறி அறுக்கும்
சிறு அரிவாள் ஆகிறது
ஒரு சிறு மஞ்சள் புன்னகை
ஒத்திப்போடுகிறது
ஒரு தற்கொலையை
அல்லது
ஒரு கொலையை

****

2 comments: