Monday, June 23, 2014

நன்நீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி


தன் ஆதி வனத்தின் 
கடைசி மூங்கில் குருத்தை துழாவும் 
தளர்ந்த தும்பிக்கையின்
பசியாக இருந்திருக்கிறது
அது !

மலை உச்சியில் ஊறும் 
ஒற்றை கொம்புத்தேனின் ருசி தேடி 
வியர்க்க முன்னேறிக்கொண்டிருக்கிறேன் 

உச்சந்தலை மயிரை சுண்டி இழுக்கும் 
மலை தேனின் முதல் துளியை 
ஏந்தும் தருணம்

வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க 
கள் வெறி கொள்கிறேன் 

மகரந்தத்தில் சிக்குண்ட கருவண்டின் சிறகடிப்பாய் 
எனது உயிர்பறவை
நம்பவியலா படபடத்து 
வானம் நீங்கியது

***
நன்றி :யாவரும்.காம்.

No comments:

Post a Comment