Tuesday, March 11, 2014

சூட்சுமத்தின் ஸ்பரிசம்



இன்றும் 
அதே தனிமை 

மேல்மாடிக்கண்ணாடி வழியே 
இறங்கும் 
வெயில் 
இவ்வீட்டை இன்னும் 
பெரிது படுத்திக் காட்டுகிறது 

புத்தக அலமாரியில் 
எட்டுக்கால்பூச்சி 
அசைவற்று.

துருவப்பிரதேசத்தின் குளிர் 
மயிர்க்கால்களை 
துளையிடத்தொடங்குகிறது 

புகுந்து கொள்கிறேன் 
வழக்கமாக அணியும் கருப்பு கோட் தான் 

கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது 
அதன் நிறம் 

***
செ.சுஜாதா.

நன்றி: சொல்வனம்.காம்  [100 வது இதழ்]


No comments:

Post a Comment