Friday, August 30, 2013

அத்தனை ஆதூரமாய் என்னை அணைக்கும் இரவு 





என் முகமூடியைக் கழற்றி எறிகிறாய்
நான் நிர்வாணம் தரித்துக்கொள்கிறேன்
என் கூந்தல் கட்டவிழ்க்கிறாய் 
இனி மின்மினிகள் நுழைந்தாடட்டுமென  
அத்தோடு தென்றலையும் கொணர்கிறாய் 
பெரும் அமைதியிழக்கிறேன்

மேலும் தனித்த வனம் தருகிறாய் 
பசியைப் பறித்துக்கொள்கிறாய்

நான்
ஆப்பிள் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டுகிறேன்
இரவே,  
புரவி ஏறி வருகிறான் நிலாக்காதலன்
இனி 
என் பாடு அவன் பாடல்!

*****
செ.சுஜாதா,
நன்றி: உயிரோசை.காம் .

No comments:

Post a Comment