Wednesday, March 2, 2016

ஈரம் ஊறும் நிலம்

உன் உதடுகள்
நான் நீந்தித் திளைக்கும்
சிறு நதியின் இரு கரைகள்
மோனம் குழையும் 
காலநிலை
அங்கு
தேன் குமிழிகளை
உண்டு பசியாறுவேன்
ஈரம் ஊறும்
அந்நிலம் அமர்ந்து
மூச்சுக்காற்றில்
கூந்தல் உலர்த்துவேன்
உதட்டு வெடிப்புகளில்
உடல் பொருத்தி
உறங்கிப்போவேன்
இந்நதிக்கரையில் என் வாசம்
கீழுதட்டில் என் கூடாரம்
மீசை வானில்
நட்சத்திரங்களை எண்ணுகின்ற
நன்னாளொன்றில்
உயிர் கிள்ளி
நதி கரைத்து
நதியாவேன்
****

No comments:

Post a Comment